கிரிக்கெட் வாரிய லெவன் தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் பயற்சி கிரிக்கெட்- இன்று தொடங்குகிறது
விஜய நகரம், தென் ஆப்ரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமானில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தெனஆஃபிரிக்கா பங்கேற்கிறது.இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் ஆந்திர மாநிலம் விஜயங்கரத்தில் இன்று தொடங்குகிறது. கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக உள்ளார்.குறுகிய வடிவிலான போட்டிகளில் சாதனை படைத்து வரும் ரோகித் சர்மா,டெஸ்ட் சிரிக்கெட்ளில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.லோகேஷ் ராகுலின் தடுமாற்றமும், ஊக்கமருந்து பயன்படுத்தாமல் ப்ரித்வி ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் இப்போது ரோஹித் ஷார்மாவுக்கு டெஸ்ட் கதவு மறுப்பிடியும் திறந்துள்ளது. தென் ஆஃபிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக ஆட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ...